Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 17, Verse 26-27

ஸத்3பா4வே ஸாது4பா4வே ச1 ஸதி3த்1யேத1த்1ப்1ரயுஜ்யதே1 |

ப்1ரஶஸ்தே11ர்மணி த1தா2 ஸச்12ப்த3: பா1ர்த2 யுஜ்யதே1 ||
26 ||
யஞ்ஞே த11ஸி தா3னே ச1 ஸ்தி1தி1: ஸதி3தி1 சோ1ச்1யதே1 |

1ர்ம சை1வ த13ர்தீ2யம் ஸதி3த்1யேவாபி4தீ4யதே1 ||
27 ||

ஸத்பாவே---—நித்திய இருப்பு மற்றும் நன்மை; ஸாது-பாவே--—நல்ல நோக்கத்துடன்; ச—-மேலும்; ஸத்--—‘ஸத்’ என்ற எழுத்து; இதி-—இவ்வாறு; ஏதத்-—இது; ப்ரயுஜ்யதே--—பயன்படுத்தப்படுகிறது; ப்ரஶஸ்தே--—மங்களகரமான; கர்மணி--—செயல்; ததா--—மேலும்; ஸத்-ஶப்தஹ-—‘ஸத் என்ற சொல்; பார்தா--—ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; யுஜ்யதே-—பயன்படுத்தப்படுகிறது; யஞ்ஞே--—தியாகம்; தபஸி—--தவத்தில்; தானே--—தொண்டு செய்வதில்; ச--மற்றும்; ஸ்திதிஹி----நிலை நிலைநிறுத்தப்பட்டவை; ஸத்---‘ஸத் என்ற எழுத்து; இதி—--இவ்வாறு; ச--—மற்றும்; உச்யதே—-உச்சரிக்கப்படுடகிறது; கர்ம--—செயல்; ச—மற்றும்; ஏவ--—உண்மையில்; தத்--அர்த்தீயம்—அத்தகைய நோக்கங்களுக்காக; ஸத்--—‘ஸத் என்ற எழுத்து; இதி---இவ்வாறு; ஏவ--—உண்மையில்; அபிதீயதே---விவரிக்கப்பட்டுள்ளது.--

Translation

BG 17.26-27: 'ஸத்' என்ற சொல்லுக்கு நித்திய இருப்பு மற்றும் நன்மை என்று பொருள். ஓ அர்ஜுனா, இது ஒரு நல்ல செயலை விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தியாகம், தவம், மற்றும் தானம் ஆகியவற்றின் செயல்பாட்டில் நிலைநிறுத்தப்பட்டவையும், ஸத் என்ற வார்த்தையால் விவரிக்கப்படுகிறது. எனவே, அத்தகைய நோக்கங்களுக்காக எந்தவொரு செயலுக்கும் 'ஸத்' என்று பெயர்.

Commentary

இப்போது 'ஸத்’ என்ற சொல்லின் அருமை ஸ்ரீ கிருஷ்ணரால் போற்றப்படுகிறது. 'ஸத் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன, மேலே உள்ள இரண்டு வசனங்கள் இவற்றில் சிலவற்றை விவரிக்கின்றன. ஸத் என்பது நிரந்தர நன்மை மற்றும் நல்லொழுக்கம் என்று பொருள்படும். கூடுதலாக, தியாகம், துறவு மற்றும் தொண்டு ஆகியவற்றின் மங்களகரமான செயல்களும் ஸத் என்று விவரிக்கப்படுகின்றன. ஸத் என்பது நிரந்தர நன்மை மற்றும் நல்லொழுக்கம் என்று பொருள்படும். கூடுதலாக, தியாகம், துறவு மற்றும் தர்மம் ஆகிய மங்களகரமான செயல்களும் ஸத் என்று விவரிக்கப்படுகின்றன. ஸத் என்றால் எப்பொழுதும் இருப்பது, அதாவது நித்திய உண்மை என்றும் பொருள்படும். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:

ஸத்1ய-வ்ரத1ம் ஸத்1ய-ப1ரம் த்1ரை-ஸத்1யம்

ஸத்யஸ்ய யோனிம் நிஹித1ம் ச1 ஸத்1யே

ஸத்1யஸ்ய ஸத்1யம் ரித1-ஸத்1ய-நேத்1ரம்

ஸத்1தியாத்1மக1ம் த்1வாம் ஶரணம் ப்1ரப1ந்நாஹா--— (10.2.26)

‘ஒப்புயர்வற்ற பகவானே, உமது ஆணையுறுதி உண்மையே, ஏனென்றால் நீயே மூலாதார உண்மை மட்டுமல்ல, பிரபஞ்ச வெளிப்பாட்டின் உருவாக்கம், பராமரிப்பு மற்றும் கலைத்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் நீயே உண்மை. உண்மை அனைத்தின் மூலமுதல் நீயே, அதன் முடிவும் நீயே. எல்லா உண்மையின் சாரமும் நீயே, மேலும் உண்மையைக் காணும் கண்களும் நீயே. எனவே, நாங்கள் உன்னதமான முழுமையான சத்தியமான உங்களிடம் சரணடைகிறோம், தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
17. ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!